உடல்பருமனைக் குறைக்க
உடல்பருமனைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்..
எலுமிச்சையும் தேனும்
ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம்.
திரிபலா பொடி
ஒரு கப் நீரை எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்துக்கொள்ளவும்ம். இரவு முழுக்க இதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை அது அளவில் பாதியாக ஆகும்வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்து வந்தாலும் எடை குறையும்.
சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காயை தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக் கொள்ளவேண்டும். துளசி இலை மற்றும் புதினா இலையை அரைத்து சுரைக்காய் சாற்றுடன் கலந்து தினமும் குடிக்க வேண்டும். சுரைக்காய் உடல்பருமனுக்கு மிக நல்ல மருந்து. வயிற்றுப் பிரச்னைகள், இதயத் தமனி அடைப்பு போன்றவற்றுக்கும் இது பலன்தரும்.
சீரக டீ
நான்கு அல்லது ஐந்து கப் நீரைச் சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரக விதை, கொத்தமல்லி விதை, பெருஞ்சீரக விதை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சூடாக்கி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதைக் குடித்துவந்தால், நிச்சயம் பலன் உண்டு.
உணவு முறை மாற்றம்
காலை உணவாக மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிக கலோரி உள்ள உணவுகளை மதியம் சாப்பிட வேண்டும். இரவில் உணவு செரிமானமாகக் குறைந்த நேரமே இருப்பதால், மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு ஏழு மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுவது நல்லது.
குழம்புப் பொடி
நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், `ஆறு சுவைகளும் இருந்தால்தான் உணவை அதிகமாக நாம் சாப்பிட மாட்டோம்’ என்கிறது ஆயுர்வேதம். இதற்காக எல்லாக் குழம்புகளுடனும் சேர்க்கும் வகையில் ஒரு குழம்புப்பொடியைத் தயாரித்துக்கொள்வது நல்லது. ஐந்து டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தய விதை, ஒரு பெரிய பிரிஞ்சி இலை, அரை டீஸ்பூன் சீரக விதை, அரை டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, ஐந்து கிராம்பு சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
எலுமிச்சையும் தேனும்
ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம்.
திரிபலா பொடி
ஒரு கப் நீரை எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்துக்கொள்ளவும்ம். இரவு முழுக்க இதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை அது அளவில் பாதியாக ஆகும்வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்து வந்தாலும் எடை குறையும்.
சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காயை தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக் கொள்ளவேண்டும். துளசி இலை மற்றும் புதினா இலையை அரைத்து சுரைக்காய் சாற்றுடன் கலந்து தினமும் குடிக்க வேண்டும். சுரைக்காய் உடல்பருமனுக்கு மிக நல்ல மருந்து. வயிற்றுப் பிரச்னைகள், இதயத் தமனி அடைப்பு போன்றவற்றுக்கும் இது பலன்தரும்.
சீரக டீ
நான்கு அல்லது ஐந்து கப் நீரைச் சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரக விதை, கொத்தமல்லி விதை, பெருஞ்சீரக விதை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சூடாக்கி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதைக் குடித்துவந்தால், நிச்சயம் பலன் உண்டு.
உணவு முறை மாற்றம்
காலை உணவாக மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிக கலோரி உள்ள உணவுகளை மதியம் சாப்பிட வேண்டும். இரவில் உணவு செரிமானமாகக் குறைந்த நேரமே இருப்பதால், மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு ஏழு மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுவது நல்லது.
குழம்புப் பொடி
நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், `ஆறு சுவைகளும் இருந்தால்தான் உணவை அதிகமாக நாம் சாப்பிட மாட்டோம்’ என்கிறது ஆயுர்வேதம். இதற்காக எல்லாக் குழம்புகளுடனும் சேர்க்கும் வகையில் ஒரு குழம்புப்பொடியைத் தயாரித்துக்கொள்வது நல்லது. ஐந்து டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தய விதை, ஒரு பெரிய பிரிஞ்சி இலை, அரை டீஸ்பூன் சீரக விதை, அரை டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, ஐந்து கிராம்பு சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
Comments
Post a Comment